Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆயிரத்தில் ஒருவன் 2 டிராப்பா? செல்வராகவன் பதில்

08 ஆக, 2021 - 04:09 IST
எழுத்தின் அளவு:
selvaraghavan-answer-about-Aayirathil-Oruvan2

செல்வராகவன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். அப்படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அதன் பிறகு படம் டிவியில் ஒளிபரப்பான போதும், பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.


2011ம் ஆண்டிலேயே “ஆயிரத்தில் ஒருவன் ஸ்கிரிப்ட் ரெடி. கடைசி இரண்டு நாட்களாக அதை இன்னும் சரியாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உருவாகும் என நம்புகிறேன்,” என டுவீட் செய்தார். அதன்பின் அந்தப் படம் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வரும், அதன்பின் அப்படியே அமுங்கிப் போகும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் “இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த, என் அன்பு உள்ளங்களுக்கு, இதோ உங்கள் முன்னால், ஆயிரத்தில் ஒருவன் 2 2024ல் உருவாகும் என டுவிட்டர் வழியே அறிவித்தார் செல்வராகவன்.


இதனிடையே, ஒரு நாளிதழில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பட்ஜெட் காரணங்களால் காலவரையின்றி நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது. அதற்கு இயக்குனர் செல்வராகவன், “எப்போது அந்த மர்மமான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்தது என்பதை சகல மரியாதையுடன் செல்ல முடியுமா?. அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்?, தயவு செய்து உங்களது ஆதாரங்களிடம் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மகேஷ்பாபு விடுத்த பசுமை இந்தியா சவால்!பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ... 300 மில்லியனைக் கடந்த சாய் பல்லவியின் 3வது பாடல் 300 மில்லியனைக் கடந்த சாய் பல்லவியின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)