50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
செல்வராகவன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். அப்படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அதன் பிறகு படம் டிவியில் ஒளிபரப்பான போதும், பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
2011ம் ஆண்டிலேயே “ஆயிரத்தில் ஒருவன் ஸ்கிரிப்ட் ரெடி. கடைசி இரண்டு நாட்களாக அதை இன்னும் சரியாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உருவாகும் என நம்புகிறேன்,” என டுவீட் செய்தார். அதன்பின் அந்தப் படம் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வரும், அதன்பின் அப்படியே அமுங்கிப் போகும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் “இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த, என் அன்பு உள்ளங்களுக்கு, இதோ உங்கள் முன்னால், ஆயிரத்தில் ஒருவன் 2 2024ல் உருவாகும் என டுவிட்டர் வழியே அறிவித்தார் செல்வராகவன்.
இதனிடையே, ஒரு நாளிதழில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பட்ஜெட் காரணங்களால் காலவரையின்றி நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது. அதற்கு இயக்குனர் செல்வராகவன், “எப்போது அந்த மர்மமான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்தது என்பதை சகல மரியாதையுடன் செல்ல முடியுமா?. அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்?, தயவு செய்து உங்களது ஆதாரங்களிடம் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.