பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
செல்வராகவன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். அப்படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அதன் பிறகு படம் டிவியில் ஒளிபரப்பான போதும், பிறகும் ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
2011ம் ஆண்டிலேயே “ஆயிரத்தில் ஒருவன் ஸ்கிரிப்ட் ரெடி. கடைசி இரண்டு நாட்களாக அதை இன்னும் சரியாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உருவாகும் என நம்புகிறேன்,” என டுவீட் செய்தார். அதன்பின் அந்தப் படம் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வரும், அதன்பின் அப்படியே அமுங்கிப் போகும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் “இதுவரை கேட்டிருந்த, காத்திருந்த, என் அன்பு உள்ளங்களுக்கு, இதோ உங்கள் முன்னால், ஆயிரத்தில் ஒருவன் 2 2024ல் உருவாகும் என டுவிட்டர் வழியே அறிவித்தார் செல்வராகவன்.
இதனிடையே, ஒரு நாளிதழில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பட்ஜெட் காரணங்களால் காலவரையின்றி நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது. அதற்கு இயக்குனர் செல்வராகவன், “எப்போது அந்த மர்மமான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்தது என்பதை சகல மரியாதையுடன் செல்ல முடியுமா?. அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்?, தயவு செய்து உங்களது ஆதாரங்களிடம் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.