நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார் ராம். இதற்கு முன்பு தமிழில் நேரம், ரிச்சி படங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் தற்போது அஞ்சலி, சூரி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துள்ள சுரேஷ்காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை யமைக்கிறார். சூரி, இந்தபடத்தில் காமெடியனாக இல்லாமல் நிவின் பாலிக்கு இணையான இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.