புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது கல்வி உதவியாகவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊரான சிவமோகா பகுதியில் உள்ள 133 வருடங்கள் பழமைவாய்ந்த அரசு பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
இந்த பள்ளியின் கட்டடங்களை புதுப்பித்துக் கொடுப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவர் செய்து கொடுக்க இருக்கிறாராம். அவரது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் இவ்வாறு செய்வது முதன் முறை அல்ல.. ஏற்கனவே கடந்த வருடம் சித்ரதுர்கா பகுதியிலுள்ள நான்கு பள்ளிகளை தத்தெடுத்து இதுபோல உதவி செய்துள்ளார் கிச்சா சுதீப்.