முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 39வது படத்தின் முதல் பார்வை படத்தின் தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. 'ஜெய் பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு சூர்யா நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிட்டனர். அது போலவே, தற்போது 'ஜெய் பீம்' படத்தையும் நான்கு மொழிகளில் வெளியிட போஸ்டரை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேற்று தலைப்பு அறிவிக்கப்பட்ட சூர்யாவின் 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் போஸ்டரைக் கூட தமிழில் மட்டும் தான் வெளியிட்டனர். இப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்கிறார்கள்.
ஆனால், 'சூரரைப் போற்று' போல நான்கு மொழிகளில் முதல் பார்வை என்பதால், 'ஜெய் பீம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் படம் பற்றிய தகவல்களை இதுவரை படக்குழுவினர் அதிகமாக வெளியில் விடவில்லை. இன்று திடீரென வெளியிட்டுள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.