39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 39வது படத்தின் முதல் பார்வை படத்தின் தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. 'ஜெய் பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு சூர்யா நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிட்டனர். அது போலவே, தற்போது 'ஜெய் பீம்' படத்தையும் நான்கு மொழிகளில் வெளியிட போஸ்டரை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேற்று தலைப்பு அறிவிக்கப்பட்ட சூர்யாவின் 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் போஸ்டரைக் கூட தமிழில் மட்டும் தான் வெளியிட்டனர். இப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்கிறார்கள்.
ஆனால், 'சூரரைப் போற்று' போல நான்கு மொழிகளில் முதல் பார்வை என்பதால், 'ஜெய் பீம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் படம் பற்றிய தகவல்களை இதுவரை படக்குழுவினர் அதிகமாக வெளியில் விடவில்லை. இன்று திடீரென வெளியிட்டுள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.