ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 39வது படத்தின் முதல் பார்வை படத்தின் தலைப்பு அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. 'ஜெய் பீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு சூர்யா நடித்து கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிட்டனர். அது போலவே, தற்போது 'ஜெய் பீம்' படத்தையும் நான்கு மொழிகளில் வெளியிட போஸ்டரை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நேற்று தலைப்பு அறிவிக்கப்பட்ட சூர்யாவின் 40வது படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் போஸ்டரைக் கூட தமிழில் மட்டும் தான் வெளியிட்டனர். இப்படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்கிறார்கள்.
ஆனால், 'சூரரைப் போற்று' போல நான்கு மொழிகளில் முதல் பார்வை என்பதால், 'ஜெய் பீம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இந்தப் படம் பற்றிய தகவல்களை இதுவரை படக்குழுவினர் அதிகமாக வெளியில் விடவில்லை. இன்று திடீரென வெளியிட்டுள்ளதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.