தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து ஒரே நாளில் ஓரளவிற்குப் பேசப்பட்டால் அதற்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ வெவ்வேறு விஷயங்களைச் சேர்த்து கருத்துக்களையும், கமெண்ட்டுகளையும் சொல்வார்கள். அப்படி ஒன்றாக பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்து இயக்கிய 'கபாலி, காலா' படங்களைப் பற்றியும் இப்போது வம்புக்கு இழுத்துள்ளார்கள் சில ரசிகர்கள்.
“அட்டகத்தி, மெட்ராஸ்' என இரண்டு படங்களையும் கதாநாயகர்களை நம்பாமல் தனது கதையையும், இயக்கத்தையும் நம்பியதால் அந்த இரண்டு படங்களுக்காகவும் பெரும் வரவேற்பை பெற்றார் ரஞ்சித்.
அதேசமயம் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கபாலி, காலா' ஆகிய படங்களில் ரஞ்சித் அதிகம் பேசப்படவில்லை. அந்த இரண்டு படங்களும் எத்தனை கோடிகளை வேண்டுமானால் லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், 'அட்டகத்தி, மெட்ராஸ்' படங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அந்தப் படங்களுக்குப் பிறகு இப்போது 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் மீண்டும் ரஞ்சித் பேசப்படுகிறார்.
எனவே, இனி ரஞ்சித் ஹீரோக்கள் பின்னால் போகாமல் தன் படத்திற்காக, கதைக்காக ஹீரோக்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்கிறார்கள்.