வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து ஒரே நாளில் ஓரளவிற்குப் பேசப்பட்டால் அதற்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ வெவ்வேறு விஷயங்களைச் சேர்த்து கருத்துக்களையும், கமெண்ட்டுகளையும் சொல்வார்கள். அப்படி ஒன்றாக பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்து இயக்கிய 'கபாலி, காலா' படங்களைப் பற்றியும் இப்போது வம்புக்கு இழுத்துள்ளார்கள் சில ரசிகர்கள்.
“அட்டகத்தி, மெட்ராஸ்' என இரண்டு படங்களையும் கதாநாயகர்களை நம்பாமல் தனது கதையையும், இயக்கத்தையும் நம்பியதால் அந்த இரண்டு படங்களுக்காகவும் பெரும் வரவேற்பை பெற்றார் ரஞ்சித்.
அதேசமயம் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கபாலி, காலா' ஆகிய படங்களில் ரஞ்சித் அதிகம் பேசப்படவில்லை. அந்த இரண்டு படங்களும் எத்தனை கோடிகளை வேண்டுமானால் லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், 'அட்டகத்தி, மெட்ராஸ்' படங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அந்தப் படங்களுக்குப் பிறகு இப்போது 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் மீண்டும் ரஞ்சித் பேசப்படுகிறார்.
எனவே, இனி ரஞ்சித் ஹீரோக்கள் பின்னால் போகாமல் தன் படத்திற்காக, கதைக்காக ஹீரோக்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்கிறார்கள்.




