புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
'பாகுபலி' படங்கள் மூலம் இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்த இயக்குனர் ராஜமவுலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கப் போகிறார். பொதுவாக ராஜமவுலி இயக்கும் படங்களைப் பற்றிய தகவல் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியாகாது. அதே சமயம் அவருடைய அப்பா கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத், மகன் ராஜமவுலியின் படங்களைப் பற்றிய சில தகவல்களை அவ்வப்போது அளித்து வருகிறார்.
அந்த விதத்தில் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, மகேஷ் பாபு இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் தான் நடக்க உள்ளதாம். அதற்கான தரவுகளை சேகரிப்பதற்காக பிரபல தென்னாப்பிரிக்க எழுத்தாளரான வில்பர் ஸ்மித் எழுதிய நாவல்களைப் படித்து வருகிறார்களாம்.
ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடிப்பதற்கு முன்பாகவே அவருடைய அடுத்த படத்தைப் பற்றிய ஆர்வம் திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் வந்துள்ளது.