இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'பாகுபலி' படங்கள் மூலம் இந்தியத் திரையுலகமே வியந்து பார்த்த இயக்குனர் ராஜமவுலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை அவர் இயக்கப் போகிறார். பொதுவாக ராஜமவுலி இயக்கும் படங்களைப் பற்றிய தகவல் அவ்வளவு சீக்கிரத்தில் வெளியாகாது. அதே சமயம் அவருடைய அப்பா கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத், மகன் ராஜமவுலியின் படங்களைப் பற்றிய சில தகவல்களை அவ்வப்போது அளித்து வருகிறார்.
அந்த விதத்தில் அடுத்த படத்தைப் பற்றிய ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, மகேஷ் பாபு இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் தான் நடக்க உள்ளதாம். அதற்கான தரவுகளை சேகரிப்பதற்காக பிரபல தென்னாப்பிரிக்க எழுத்தாளரான வில்பர் ஸ்மித் எழுதிய நாவல்களைப் படித்து வருகிறார்களாம்.
ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படத்தை முடிப்பதற்கு முன்பாகவே அவருடைய அடுத்த படத்தைப் பற்றிய ஆர்வம் திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் வந்துள்ளது.