வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மகிழ் திருமேனியின் முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் அறிமுகமான 3 ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. அந்த படம் தோல்வி அடைந்ததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.
பின்னர் சுட்ட கதை படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு கள்ளபடம், களம், டிக்கெட், ரிச்சி, ஓடு ராஜா ஓடு உள்பட பல படங்களில் நடித்தார். இந்த படங்களில் கிடைக்காத புகழ் கர்ணன் படத்தில் கிடைத்தது. சமீபத்தில் அவர் மலையாளத்தில் வெளிவந்த கோல்ட் கேஸ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவர் விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். அச்சு ராஜமணி இசை அமைக்கிறார், பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கருணாகரன். சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் சக்திவேல் பெரியசாமி படம் குறித்து கூறியதாவது: ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு. தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.
லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்க கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த படமாக அமையும். என்றார்.