'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
மகிழ் திருமேனியின் முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் அறிமுகமான 3 ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் லட்சுமி பிரியா சந்திரமவுலி. அந்த படம் தோல்வி அடைந்ததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.
பின்னர் சுட்ட கதை படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு கள்ளபடம், களம், டிக்கெட், ரிச்சி, ஓடு ராஜா ஓடு உள்பட பல படங்களில் நடித்தார். இந்த படங்களில் கிடைக்காத புகழ் கர்ணன் படத்தில் கிடைத்தது. சமீபத்தில் அவர் மலையாளத்தில் வெளிவந்த கோல்ட் கேஸ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவர் விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். அச்சு ராஜமணி இசை அமைக்கிறார், பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கருணாகரன். சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் சக்திவேல் பெரியசாமி படம் குறித்து கூறியதாவது: ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு. தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.
லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்க கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில் சிறந்த படமாக அமையும். என்றார்.