பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
நடிகர் ரஜினிகாந்தின் 168-வது படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த கலகலப்பான படமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள காட்சிளை படமாக்குவதற்காக இன்று படக்குழு கோல்கட்டா செல்ல இருந்தனர். ஆனால் சில காரணங்களால் ரஜினி கோல்கட்டா செல்வது தள்ளிப் போய் உள்ளது. எனவே சென்னையில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்க உள்ளனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. கோல்கட்டாவில் கூடுதலான நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி இருப்பதால் சில நாட்கள் கழித்து படக்குழு கோல்கட்டா செல்லலாம் என்று கூறப்படுகிறது.