கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், சோசியல் மீடியாவில் பல அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறார். இந்நிலையில் சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய்க்கு நேற்று நீதிபதி கண்டனம் தெரிவித்தது, அபராதம் விதித்தது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
அதில், நடிகர் விஜய் ரியல் ஹீரோதான். அவர் பல ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கிறார். பிரதமர், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்திருக்கிறார். பல மாணவர்களை படிக்க வைக்கிறார். ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவுகிறார். அதனால் இதையெல்லாம் மறந்து விட்டு நீதிமன்றத்தில் நடந்ததையே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் செய்து வரும் நல்ல விசயங்களை மறக்கக் கூடாது என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் காயத்ரிரகுராம்.