மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அன்பரசன் என்ற புதுமுகம் இயக்கும் படம் பேயை காணோம். இதில் புதுமுகம் கவுசிக் நாயகனாக நடிக்க, பரபரப்பு நடிகை மீரா மிதுன் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இயக்குனர் தருண் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி அன்பரசன் கூறியதாவது: காவல் நிலையங்களுக்கு காணவில்லை புகார் நிறைய வரும். முதன் முறையாக பேயை காணோம் என்று ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே படத்தின் கதை. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது.
படத்திற்கு கவர்ச்சியும், துணிச்சலும் மிக்க நடிகை வேண்டும் என்பதால் மீரா மிதுனை தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்தார். ஆனால் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். அதனால் இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. அங்கே போய் சிகரெட் புகைத்து விட்டு வாருங்கள் என்று செட்டை விட்டு அனுப்பி வைத்தேன். அதன்பிறகு அவர் செட்டுக்குள் புகைபிடிப்பதில்லை. என்றார்.