ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

அன்பரசன் என்ற புதுமுகம் இயக்கும் படம் பேயை காணோம். இதில் புதுமுகம் கவுசிக் நாயகனாக நடிக்க, பரபரப்பு நடிகை மீரா மிதுன் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர இயக்குனர் தருண் கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி அன்பரசன் கூறியதாவது: காவல் நிலையங்களுக்கு காணவில்லை புகார் நிறைய வரும். முதன் முறையாக பேயை காணோம் என்று ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே படத்தின் கதை. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது.
படத்திற்கு கவர்ச்சியும், துணிச்சலும் மிக்க நடிகை வேண்டும் என்பதால் மீரா மிதுனை தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்தார். ஆனால் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது சொந்த பிரச்சினை. ஆனால் அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். அதனால் இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. அங்கே போய் சிகரெட் புகைத்து விட்டு வாருங்கள் என்று செட்டை விட்டு அனுப்பி வைத்தேன். அதன்பிறகு அவர் செட்டுக்குள் புகைபிடிப்பதில்லை. என்றார்.