பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருக்கும் விஷயங்களில் 'இந்தியன் 2' பட விவகாரமும் ஒன்று. கடந்த வாரம் இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் தெலுங்குப் படம் குறித்த பேச்சு வார்த்தையை படத்தின் தயாரிப்பாளருடனும், நாயகன் ராம் சரணுடனும் நடத்தினார்.
'இந்தியன் 2' படத்தின் கதாநாயகனாக கமல்ஹாசன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியாகிறது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போகிறார்கள்.
'இந்தியன் 2' படத்திற்காக இதுவரையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான லைகா. படத்தின் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர். படத்தின் நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். இப்படி இரண்டு பெரும் கலைஞர்கள் தாங்கள் பங்கேற்றுள்ள படத்தை அப்படியே 'அம்போ'வென விட்டுவிட்டு அவர்களது அடுத்த படத்திற்குப் போவது எந்த விதத்தில் நியாயம் என கோலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தெலுங்கு, கன்னடத் திரையுலகங்கள் பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் அப்படியான பல கோடி ரூபாய் செலவு செய்து படங்களை எடுக்கும் ஒரே நிறுவனமாக இருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் இப்படி பிரச்சினை வந்தால் தனது படத் தயாரிப்பை எப்படி தொடரும் என திரையுலகில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள்.