கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் தான் என உலக அளவில் ஒரு பெயர் இருக்கிறது. ஆனால், பாலிவுட்டை விட சிறந்த படங்கள் தென்னிந்திய அளவில் உருவாகி வருகிறது. இருப்பினும் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளுக்கு பாலிவுட் என்பது அவர்களது பெரும் கனவாகவே இருக்கிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஹிந்தியில் நடிக்கப் போனால் தான் சம்பளம் மிக அதிகமாகக் கிடைக்கும். சமீப காலமாக தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் ஹிந்திப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ராஷ்மிகா மந்தானா ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் பாலிவுட்டில் ஒரு வீட்டை வாங்கினார். பூஜா ஹெக்டேவுக்கும் மும்பையில் வீடு உள்ளது. தற்போது நடிகர் ராம் சரண் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
அந்த வரிசையில் அடுத்ததாக சமந்தாவும் பாலிவுட்டில் வீட்டை தேடிக் கொண்டிருக்கிறாராம். 'த பேமிலி மேன் 2' வெப் தொடரில் நடித்த பிறகு அவருக்கு பல பாலிவுட் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். எனவே, மும்பையில் தங்கியிருந்தால் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு வசதியாக இருக்கும் என யோசிக்கிறாராம்.
பாலிவுட்டில் எப்போதுமே தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்தும் தர மாட்டார்கள். விதி விலக்காக நடிகைகளை மட்டும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பார்கள். இங்கிருந்து செல்பவர்களில் யாருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது எதிர்காலத்தில் தெரிய வரும்.