பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தனுசுக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படம் நாரப்பா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. வெங்கடேஷ், பிரியாமணி நடித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் நாரப்பாவை ஓடிடியில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ரசிகை நாரப்பாவை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.