முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா |
கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கிற்கான தளர்வுகள் ஒவ்வொரு வாரத்திற்குமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில், ஜுலை 5ம் தேதி வரையிலான தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் தியேட்டர்கள் திறப்பு குறித்து எந்தவித அம்சமும் இடம் பெறவில்லை.
கடந்த வார தளர்வுகளில் அறிவிக்கப்பட்ட படப்பிடிப்புக்கான அனுமதி, தியேட்டர்கள் பராமரிப்புக்கான அனுமதி ஆகியவை மட்டும் இந்த வாரமும் தொடர்கின்றன. தியேட்டர்களைத் திறக்க மாநில அரசு அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த திரையுலகினர் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய அரசு பதவியேற்ற பிறகு திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் இன்னமும் சம்பந்தப்பட்ட அமைச்சரையோ, முதல்வரையோ சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேசாமலேயே உள்ளதாக திரையுலகின் ஒரு பிரிவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
சுமார் இரண்டு மாத காலமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 50 படங்களாவது வெளியாகியிருக்கும். மேலும், சில முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இதனால், தியேட்டர்களைத் திறக்கும் போது படங்களை வெளியிட கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, எப்படியும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சில முன்னணி நடிகர்களின் படங்களை ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் போதுதான் திரையுலகினருக்கு நம்பிக்கை வரும்.