விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஒரு ஆக்சன் காட்சியை வெளிநாடு சென்று படமாக்க திட்டமிட்ட நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை வந்து விட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் அந்த காட்சியை வெளிநாடு அல்லது இந்தியாவிலேயே படமாக்க முடிவு செய்திருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வலிமை அப்டேட் வெளியாகும் என்று அறிவித்து விட்டு கொரோனா அலை காரணமாக அதை நிறுத்தி வைத்திருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதியில் இருந்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.