ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ்த் திரையுலகத்தின் நம்பர் 1 நடிகை என கடந்த சில வருடங்களாக புகழின் உச்சியில் இருப்பவர் நயன்தாரா. அவரை தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க வைக்க அங்குள்ளவர்கள் முயற்சித்தாலும் அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். அவரைப் பற்றி எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் அவரது இமேஜ் குறையாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என கோலிவுட்டிலும் வியக்கிறார்கள்.
பொதுவாக, தமிழில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பாலிவுட் சென்று ஹிந்திப் படங்களில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், நயன்தாராவிடம் அந்த ஆசை இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவர் நினைத்திருந்தால் பத்து வருடங்களுக்கு முன்பே பாலிவுட் சென்றிருக்கலாம், இருந்தாலும் செல்லவில்லை.
இப்போது நயன்தாராவை பாலிவுட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆசையில் அட்லீ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கிய 'ராஜா ராணி, பிகில்' இரண்டு படங்களிலும் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அடுத்து பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை அட்லீ இயக்க உள்ளார். இப்படத்திற்காகத்தான் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் அட்லீ. அவரது அழைப்பை நயன்தாரா ஏற்றுக் கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.