இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா காலத்தில், தமிழ்நாட்டு நடிகைகள் அட்வைஸ் பண்ணி வீடியோ வெளியிடுவதோடு சரி. ஒரு சிலர் தான் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சிலர் உணவுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் நடிகைகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். போதை பொருள் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற ராகிணி, சஞ்சனா கல்ராணி கூட ரோட்டில் இறங்கி வேலை செய்கிறார்கள்.
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஏழைகளுக்கு உணவு அளித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளில் இறங்கியவர் பிரணிதா சுபாஷ். தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரணிதாவுக்கும் தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தனது திருமண பரிசாக தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் தடுப்பூசி முகாம் அமைத்து சொந்த செலவில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கினார். இந்த பணியை கணவருடன் இணைந்து தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.