மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் உதயன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் அருள்நிதி ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் படங்களில் நடித்தார். அதன் பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள்,. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டவர் கடந்த ஜூன் மாதம் தாய் ஆனார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு, அம்மா கடமைகளை முடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் நடிக்கத் தயாராகி விட்டதை அறிவித்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ராமண அவதாரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.