ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரான விஜய் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு தன்னுடைய 65வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. கொரானோ இரண்டாவது அலை பரவத் தொடங்கியதும் படக்குழு சென்னை திரும்பியது.
பொதுவாக விஜய் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் போதுதான் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால், விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு பேட்டி ஒன்றிலும் வம்சி அது பற்றிய தகவலை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த அணுகுமுறை விஜய்க்குப் பிடிக்காதே என அப்போதே கோலிவுட்டில் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அதற்கேற்றபடி சில காரணங்களைச் சொல்லி அப்படத்தில் நடிப்பதைத் தவிர்த்து விடலாமா என விஜய் யோசிப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இங்கேயே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் போது, தெலுங்குத் தயாரிப்பாளரின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்ற சலசலப்பும் இங்கு எழுந்துள்ளது.
எனவே, தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் விஜய் நடிப்பது மறுபரிசீலனை செய்யப்படும் என்றே தெரிகிறது.