பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக என்ன செய்வார்கள் என்று என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மனநிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
அதேபோல் இதே பிரச்சினையை மையமாக வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட பிரியங்கா நடிப்பில் மிக மிக அவசரம் என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார். அதில் சாலை பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் போலீசாரை சாலையோர பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அறிவித்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் என்பது பொழுபோக்கு மட்டுமல்ல, அதைத்தாண்டி இந்த சமூகத்தில் எத்தகையை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் மிக மிக அவசரம் படத்தை இயக்கியதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ்காமாட்சி.