திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழில் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன் பின் பல தெலுங்குப் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையானார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.
சார்மி செல்லமாக வளர்க்கும் நாயின் பெயர் 'ஐட்டம்'. தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா வளர்க்கும் நாயின் பெயர் 'ஆரா'.
சார்மி அவருடைய நாயை தன்னுடைய குழந்தை என்றும், தன்னை அம்மா என்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அந்த நாயின் மீது அளவிலாத அன்பு வைத்துள்ளார். அது போலவே ராஷ்மிகாவையும் 'அம்மா' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவும், சார்மியும் தற்போது நல்ல தோழிகளாகி விட்டார்களாம். இருவரும் அவர்களது செல்ல நாய்க்குட்டிகளுடன் சந்தித்த போது, அந்த நாய்களும் அன்பைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
அந்த சந்திப்பு பற்றி சார்மி, “ஆரா, ஐட்டமை சந்தித்த போது... புதிய அம்மா ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள். உங்களது குழந்தை மிகவும் அபிமான தேவதையாக இருக்கிறது. உங்களை எங்களது மும்பைக்கு வரவேற்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் அமிதாப்புடன் நடிக்கும் 'குட் பை' படத்திற்காக மும்பை சென்றுள்ளார் ராஷ்மிகா.