டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' |
தமிழில் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன் பின் பல தெலுங்குப் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையானார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு, திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.
சார்மி செல்லமாக வளர்க்கும் நாயின் பெயர் 'ஐட்டம்'. தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தானா வளர்க்கும் நாயின் பெயர் 'ஆரா'.
சார்மி அவருடைய நாயை தன்னுடைய குழந்தை என்றும், தன்னை அம்மா என்றும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அந்த நாயின் மீது அளவிலாத அன்பு வைத்துள்ளார். அது போலவே ராஷ்மிகாவையும் 'அம்மா' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகாவும், சார்மியும் தற்போது நல்ல தோழிகளாகி விட்டார்களாம். இருவரும் அவர்களது செல்ல நாய்க்குட்டிகளுடன் சந்தித்த போது, அந்த நாய்களும் அன்பைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
அந்த சந்திப்பு பற்றி சார்மி, “ஆரா, ஐட்டமை சந்தித்த போது... புதிய அம்மா ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள். உங்களது குழந்தை மிகவும் அபிமான தேவதையாக இருக்கிறது. உங்களை எங்களது மும்பைக்கு வரவேற்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் அமிதாப்புடன் நடிக்கும் 'குட் பை' படத்திற்காக மும்பை சென்றுள்ளார் ராஷ்மிகா.