'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருபவர்களுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு ஆலோசனை சொல்கிறார்.
“என் தோழி ஒருவர் என்னிடம் சொன்னதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயத்தில் அல்லது பணம் அல்லது அறிவு தருபவற்றில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். வேறு ஒன்றும் தேவையில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் தனது அழகான சிரிப்பு மூலம் பல ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடிப்பாரா என்று நம் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்துவது போலத் தெரிகிறது.