ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன. பெரும்பாலான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்காக சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியதாகச் சொன்னார்கள். மே 10ம் தேதிக்குப் பிறகே ரஜினிகாந்த் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
இதனிடையே, தெலங்கானாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கான தளர்வுகளை ஜுன் 10ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக அறிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தெலுங்குத் திரையுலகினர் இந்த மாதக் கடைசியில் இருந்து விடுபட்ட தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் தமிழ் சினிமாவிலிருந்தும் பலர் அங்கு சென்று படப்பிடிப்பை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.