கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் தான், தான் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்துவிட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இதில் மீனா, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அதிரடியான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென என்னருகில் வந்த ரஜினி சார், மீனா நீ எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டாய் என கூறினார்.. பலரும் அருகில் இருந்த நிலையில் ரஜினி சார் அப்படி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே அவர் சிரித்துக் கொண்டே, “நாங்கள் எல்லோருமே இத்தனை வருடங்களில் மாறிவிட்டோம்.. ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்தபோது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாயே” என கூறி கலாட்டா பண்ணி, என்னை மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தார்” என கூறியுள்ளார் மீனா.