தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளில் முக்கியமானவர் வீர் சாவர்கர். ஆங்கிலேயர்களை மிக கடுமையாக எதிர்த்ததால் 50 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். ஆங்கிலேயர்களின் தலைநகரான லண்டனிலேயே அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர். இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கும் இந்து மகாசபையை உருவாக்கியவர். பல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், வீரர்களுக்கும் ரோல்மாடலாக இருந்தவர்.
அவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாரிக்கப்பட இருக்கிறது. அவரது 138வது பிறந்த நாளான நேற்று இது முறைப்படி அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை மகேஷ் மஞ்சரேகர் இயக்குகிறார். ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர் என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தீப் சிங் மற்றும் அமித் பி.வாத்வானி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ரிஷி வீர்மணி மற்றும் மகேஷ் மஞ்சரேகர் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராணி லட்சுமிபாய் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாகி இருப்பது குறிப்பிடத்தக்து.