துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த விஜய்சேதுபதி, இந்த வருடத்தில் வெளியான மாஸ்டர் தெலுங்கு பதிப்பு மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கிலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தநிலையில் விஜய்சேதுபதியை வைத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம் பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
இந்தப்படத்திற்கான கதையையும் விஜய்சேதுபதியிடம் சொல்லி ஒகே வாங்கி விட்டார்களாம். குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக இருக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கு சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட பங்கு தருவதாகவும் பேசப்பட்டுள்ளதாம்.