'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா தொற்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சவாலாக உள்ளது. இது போன்ற ஒரு விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை. அதனால் இதனை நம்மால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை நம்மில் பலர் சந்திக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இதுபோன்ற நேரங்களில் நாம் நேர்மறையாகவும், நேர்மறையான மனதுடனும் இருப்பது நல்லது.
நம் சாதாரண ஹீரோக்கள் (முன்கள பணியாளர்கள்) சில அசாதாரணமான விஷயங்களைச் செய்கிறார்கள், இது எனக்கு நம்பிக்கையைத் தந்தது மற்றும் என் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியுள்ளது. இது உங்கள் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வருவதற்கும், ஒரு சிறிய நம்பிக்கையைத் தருவதற்கும், உழைக்கும் இந்த ஹீரோக்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறேன். உங்களுக்கு நிறைய அன்பு. உங்களுக்கு நிறைய பலம். நன்றாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.




