புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கணிக்க முடியாத இந்த காலகட்டத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா தொற்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சவாலாக உள்ளது. இது போன்ற ஒரு விஷயத்திற்கு நாம் தயாராக இல்லை. அதனால் இதனை நம்மால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை நம்மில் பலர் சந்திக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் நடக்கிறது என்ற உண்மையை ஜீரணிக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இதுபோன்ற நேரங்களில் நாம் நேர்மறையாகவும், நேர்மறையான மனதுடனும் இருப்பது நல்லது.
நம் சாதாரண ஹீரோக்கள் (முன்கள பணியாளர்கள்) சில அசாதாரணமான விஷயங்களைச் செய்கிறார்கள், இது எனக்கு நம்பிக்கையைத் தந்தது மற்றும் என் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியுள்ளது. இது உங்கள் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வருவதற்கும், ஒரு சிறிய நம்பிக்கையைத் தருவதற்கும், உழைக்கும் இந்த ஹீரோக்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறேன். உங்களுக்கு நிறைய அன்பு. உங்களுக்கு நிறைய பலம். நன்றாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.