'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
கார்த்தி நடித்த கைதி படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கார்த்தி இந்த படம் வெளிவந்த உடனேயே கூறியிருந்தார். ஆனால் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த மாஸ்டர் , கமல் நடிக்கும் விக்ரம் படம், கைதி இந்தி ரீமேக், விஜய்யுடன் மற்றுமொரு படம் என ரூட் மாறி வேகமாக சென்று கொண்டிருந்தார். இதனால் கைதி 2ம் பாகம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தோன்றியது.
இந்த நிலையில் கைதி இரண்டாம் பாகும் வரும் என்ற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார். டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் கைதியான டில்லியின் பின்புலம் பற்றி அதிகமாக காட்டப்பட்டிருக்காது குறிப்பாக அவர் எதற்கு சிறைக்கு வந்தார் என்று கூறப்பட்டிருக்காது. படத்தின் முடிவில் வில்லன் அடைக்கலத்துக்கும், கைதி டில்லிக்கும் ஒரு கணக்கு பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் முடிச்சுப்போட்டு இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.