'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கார்த்தி நடித்த கைதி படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கார்த்தி இந்த படம் வெளிவந்த உடனேயே கூறியிருந்தார். ஆனால் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த மாஸ்டர் , கமல் நடிக்கும் விக்ரம் படம், கைதி இந்தி ரீமேக், விஜய்யுடன் மற்றுமொரு படம் என ரூட் மாறி வேகமாக சென்று கொண்டிருந்தார். இதனால் கைதி 2ம் பாகம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று தோன்றியது.
இந்த நிலையில் கைதி இரண்டாம் பாகும் வரும் என்ற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார். டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் கைதியான டில்லியின் பின்புலம் பற்றி அதிகமாக காட்டப்பட்டிருக்காது குறிப்பாக அவர் எதற்கு சிறைக்கு வந்தார் என்று கூறப்பட்டிருக்காது. படத்தின் முடிவில் வில்லன் அடைக்கலத்துக்கும், கைதி டில்லிக்கும் ஒரு கணக்கு பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் முடிச்சுப்போட்டு இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.




