'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தற்போது 'ஆச்சார்யா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'லூசிபர்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க உள்ளார். மோகன்ராஜா இப்படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும், நேரடி தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். அவற்றிற்கான இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு கதை விவாதங்கள் நடந்து வருகின்றன.
அப்படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சிரஞ்சீவி. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தை பார்த்தாராம். படம் பிடித்துப் போகவே அதை தனக்கேற்றபடி கதை அமைத்துத் தருமாறு 'சாஹோ' இயக்குனர் சுஜித்திடம் சொல்லியிருக்கிறாராம். அவரும் கதை விவாதம் நடத்தி வருவதாகத் தகவல்.
விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 150' மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. தற்போது இரண்டு அஜித் படங்களின் ரீமேக்கில் ஆர்வம் காட்டி வருவது ஆச்சரியம்தான்.




