பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் காளி வெங்கட். மெர்சல், தெறி, மாரி, மாரி 2, கொடி, ஈஸ்வரன், சூரரைப்போற்று, வேலைக்காரன், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
காளி வெங்கட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனை கிடைக்காமல் வீட்டிலேயே தனித்திருந்து குணமடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 22 நாட்கள் அறிகுறிகள் இருந்தன. இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்தேன். மருத்துவமனையில் சேர்ந்து சிகிக்சை பெற வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக தேடியபோது மருத்துவமனை கிடைக்கவில்லை. போன மாதம் தான் இது நடந்தது. அதன்பின் டாக்டர் ஒருவரின் உதவியோடு உரிய சிகிச்சை எடுத்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். கொரோனா வராமல் பார்த்துக்கொள்வது தான் முக்கியம். பதற்றமாக கூடாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதனால கொரோனா வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வந்தால் பயப்பபடாதீர்கள், அதே நேரத்தில் அலட்சியப்படுத்தவும் செய்யாதீர்கள். இவ்வாறு நடிகர் காளி வெங்கட் தனது வீடியோவில் கூறியுள்ளார்.