பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விக்ரமும், அவரது மகன் துருவும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். விக்ரமின் 60வது படமாக இது உருவாகிறது. இது அண்டர்கிரவுண்ட் தாதாக்களின் கதை என்று கூறப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றார்போல விக்ரமும், துருவும் தங்கள் உடலை தயார்படுத்தியிருக்கிறார்கள் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் துருவ் விக்ரம் பதிவிட்டதாவது : ‛‛இந்த புகைப்படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் எடுக்கப்பட்டது. கடினமான ஓராண்டுக்கு பின் பணிக்கு சென்றது அவ்வளவு அருமையாக இருந்தது. எனக்கு பிடித்த இயக்குனர், குழுவுடன் பணியாற்றுவது சிறப்பாக இருந்தது. மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு போக மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அனைவரும் எதிர்பார்த்தது போலவே எல்லாம் சரியாகி மிக விரைவிலேயே பழைய நிலைக்கு திரும்புவோம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வீட்டுக்குள்ளேயே இருங்கள், நேர்மறையாக சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த கொரோனாவை வென்று விரைவில் மீண்டு வருவோம். பழையபடி வாழ்க்கையை ஜமாய்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
விக்ரம், துருவ் நடிக்கும் அடுத்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குகிறார். கிராமத்து கபடி விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் விக்ரம் கபடி கோச்சராகவும், துருவ் கபடி வீராகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இரண்டு படங்களிலும் விக்ரமும், துருவும் நேருக்கு நேர் மோதுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.