திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கடந்த ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே புலம்பெயர்ந்த மக்களுக்கு பல வகையிலும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்த பாலிவுட் நடிகர் சோனுசூட்டின் சேவை இந்த கொரோனா தொற்றிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் வழங்கி பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சோனு சூட்டின் இந்த சேவையைப் பாராட்டி ஆந்திராவிலுள்ள நெல்லூரில் அவரது கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். அதோடு சோனுசூட்டை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இனிமேல் நாங்களும் இனி உதவுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்து பணிவான நன்றி என பதிவிட்டுள்ளார் சோனுசூட்.