துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் திரையுலகினர் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த வகையில், ராட்சசன், அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமியும் கடந்த மே 3-ந்தேதி அன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தவர். அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது டுவிட்டரில் கொரோனா தொற்றில் இருந்து தான் பூரண குணமடைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியட்டுள்ளார் அம்மு அபிராமி. நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் அருளாலும், அனைவரது பிரார்த்தனையாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு முடிந்தவரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மு அபிராமி.