ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் திரையுலகினர் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த வகையில், ராட்சசன், அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமியும் கடந்த மே 3-ந்தேதி அன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தவர். அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது டுவிட்டரில் கொரோனா தொற்றில் இருந்து தான் பூரண குணமடைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியட்டுள்ளார் அம்மு அபிராமி. நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் அருளாலும், அனைவரது பிரார்த்தனையாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு முடிந்தவரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மு அபிராமி.