புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, அர்ச்சனா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛டாக்டர்'. அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டபோதிலும் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆக முடியாமல் உள்ளது. கடைசியாக ரம்ஜான் தினத்தில் படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் கொரோனாவால் இப்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் அதிலும் ஏதோ சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் டாக்டர் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோ ராஜேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛டாக்டர் படம் அப்டேட் கேட்டு தினமும் பலரும் எங்களை தொடர்பு கொள்கின்றனர். படமும் முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இந்த கொரோனா காலத்தில் படத்தை வெளியிட முடியாமல் பொருளாதார ரீதியான பிரச்னைகளையும் எதிர் கொண்டு வருகிறேன். இருப்பினும் என் சக்திக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கையை எடுத்து படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறேன். மற்றொருபுறம் கொரோனாவால் நம் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் டாக்டர் படம் ரிலீஸ் குறித்து நான் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கொரோனா விதிமுறையை பின்பற்றி வீட்டிலேயே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.