பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோன 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதோடு, திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரையுலக பிரமுகர்களை அழைத்து ஆலோசனை செய்தார். இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்துவது, பெப்சி தொழிலாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது. இது முதல்வரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.