புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது.
ரஜினிகாந்த் அவருடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாகத் தகவல். இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து குழுவினர் சென்னை திரும்ப உள்ளார்களாம். சென்னை வந்ததும் ரஜினிகாந்த் உடனடியாக டப்பிங் பேசிக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
டப்பிங் பேசி முடித்த பின் நாம் முன்பே சொன்னபடி ரஜினிகாந்த் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம். அங்கு ஏற்கெனவே இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ் அப்பா ரஜினிகாந்தின் மருத்துவ பரிசோதனையை கூடவே இருந்து கவனித்துக் கொள்வாராம்.
'அண்ணாத்த' படத்தை திட்டமிட்டபடியே தீபாவளிக்குத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் கொரோனா காலகட்டத்திலும் படப்பிடிப்பை இடைவிடாது நடத்தியதாகச் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் தரப்பில் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது என்கிறார்கள்.