பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தடைபட்டு நிற்கிறது.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கமல்ஹாசனும் இருவருக்கும் இடையேயான பஞ்சாயத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய தலையீடும் சூட்டைத் தணிக்கவில்லை என்கிறார்கள்.
இதனிடையே, கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தளர்வுகள் வந்தால் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளாராம். லைகா, ஷங்கர் இடையேயான பிரச்சினையை அவர்களே பேசித் தீர்க்கட்டும் என்ற முடிவுக்கும் கமல் வந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள்.
கட்சியில் ஒரு பக்கம் பிரச்சினை எழுந்துள்ளதால் அதைத் தீர்க்கவே கமல்ஹாசன் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், தற்போதைக்கு வேறு பிரச்சினைகளில் அவர் தலையிட விரும்பவில்லையாம். எந்த சிக்கலுமில்லாத 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்த பிறகு 'இந்தியன் 2' பற்றி யோசிக்கும் முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.