4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர் மன்சூரலிகான். ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் நடிகர் மன்சூரலிகான். சமீபத்தில் நடிகர் விவேக் இறந்தபோது அவரது இறப்புக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று சொல்லி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதையடுத்து அவர் கைதாகும் நிலை ஏற்பட்டது. பின்னர் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் பெற்றார். மேலும் ரூ. 2 லட்சம் அபராதமும் செலுத்தினார்.
இந்நிலையில் இன்று(மே 10) நடிகர் மன்சூரலிகான் கிட்னியில் கல் அடைப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைக்கான பணிகள் துவங்கி உள்ளன. இன்று அல்லது நாளைக்குள் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.




