ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் ஏற்பட்ட கிரேன் விபத்து, கொரோனா பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் ஆரம்பமாகாமல் இருந்தது.
ஆனால், அதற்குப் பிறகும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் இழுத்துக் கொண்டே போனது. இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்களிருவருக்கும் இருக்கும் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இருவரும் பேசியும் தீர்வு வரவில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க கமல் முடிவெடுத்துள்ளாராம். அவர் ஏற்கெனவே 'விக்ரம்' படத்தை அறிவித்துவிட்டாலும், 'இந்தியன் 2' படத்தை முடித்துவிடுவோம் என அதற்கான பஞ்சாயத்தில் இறங்கிவிட்டதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹாசனே பஞ்சாயத்தில் இறங்கிய பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய இரு தரப்பினரும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து வைக்க வேண்டும் என கமல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
விரைவில் 'இந்தியன் 2' விவகாரம் முடிவுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.