இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் விஜய்சேதுபதி தற்போது இரண்டாவது முறையாக மலையாளத்தில் நடித்துள்ள, அவரது 19 (1)(a) என்கிற படமும் விரைவில் ஒடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. முன்னணி ஒடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறது..
இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். தவிர, மலையாள நடிகர் இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.