பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2019ல் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் விஜய்சேதுபதி தற்போது இரண்டாவது முறையாக மலையாளத்தில் நடித்துள்ள, அவரது 19 (1)(a) என்கிற படமும் விரைவில் ஒடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. முன்னணி ஒடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட இருக்கிறது..
இந்து வி.எஸ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். தவிர, மலையாள நடிகர் இந்திரஜித் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இந்தப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.