பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேம்நாத் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார். மேலும் கொரோனா தொற்றுக்கும் ஆளாகி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் பேசவேண்டும் என்பதை தனது கடைசி ஆசையாக சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி இருந்தார் ஹேம்நாத்.
இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவுக்கு எட்டியதும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக, அந்த ரசிகர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருடன் வீடியோ காலில் பேசினார். அவர் பேசும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். மேலும் அவர் கூறும்போது, “உன்னோடு பேசியதும் உன் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கிறது.. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் ஹேம்நாத்” என கூறியுள்ளார்..