ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சர்யா, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்பட பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன.
ஆனபோதும் ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் தொடர்ந்து சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு கொரோனா அலை காரணமாக சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் -நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர். இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.