32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், சிரஞ்சீவியின் ஆச்சர்யா, பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்பட பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே நிறுத்தப்பட்டன.
ஆனபோதும் ஆந்திராவில் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்பதால் தொடர்ந்து சில படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமந்தாவின் சகுந்தலம் படத்தின் படப்பிடிப்பும் அப்படத்திற்காக ரூ. 6 கோடி மதிப்பில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
ஆனால் சமீபத்தில் தனது 34ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தா, அதன்பிறகு கொரோனா அலை காரணமாக சகுந்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் இப்போது மற்ற நடிகர் -நடிகைகளை வைத்து தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் குணசேகர். இதேபோல் நானி நடிக்கும் ஷியாம் சிங்கராய் என்ற படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.