சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
ராஜமவுலியின் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்டத் திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.
இப்படத்தை அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தினால் இப்படத்தின் பாதிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும் என்கிறார்கள்.
அதனால், படத்தை அக்டோபர் மாதம் திட்டமிட்டபடி வெளியிட வாய்ப்பில்லை. எனவே, படத்தை அடுத்த வருட கோடை விடுமுறையில் தள்ளி வைக்கலாமா என யோசித்து வருகிறார்களாம்.
'பாகுபலி 2' படம் கூட ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாகி பெரிய வசூலைப் பெற்றது. எனவே, 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் அப்படி வெளியிடவே வாய்ப்புகள் அதிகம் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.