பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சென்னை : சென்னை தி.நகரில் வாடகை பாக்கி தராமல் நடிகை விஜயலட்சுமி மிரட்டி வருவதாக விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தி.நகர் அபிபுல்லா சாலையில் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு விடுதி உள்ளது. இதன் மேலாளர் விக்னேஷ்வரன் 34, நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நடிகை விஜயலட்சுமி தன் சகோதரியுடன் பிப். 24ல் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் விடுதி ஒன்றை எடுத்து வசித்து வந்தார்.
கடந்த மாதம் சகோதரியின் சிகிச்சைக்காக விடுதி அறையை பூட்டி சென்றவர் இம்மாதம் 24ம் தேதி திரும்பினார். அப்போது விடுதி மேலாளர் உத்தரவின்படி அவரது உடைமைகளை மாற்று அறையில் ஊழியர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகை ஆத்திரத்தில் விடுதி ஊழியரை காலணியால் தாக்கி விடுதியில் தங்கியிருந்ததற்கான 1.50 லட்சம் ரூபாய் தராமல் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்று தருமாறு குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.