பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சென்னை : சென்னை தி.நகரில் வாடகை பாக்கி தராமல் நடிகை விஜயலட்சுமி மிரட்டி வருவதாக விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தி.நகர் அபிபுல்லா சாலையில் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு விடுதி உள்ளது. இதன் மேலாளர் விக்னேஷ்வரன் 34, நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நடிகை விஜயலட்சுமி தன் சகோதரியுடன் பிப். 24ல் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் விடுதி ஒன்றை எடுத்து வசித்து வந்தார்.
கடந்த மாதம் சகோதரியின் சிகிச்சைக்காக விடுதி அறையை பூட்டி சென்றவர் இம்மாதம் 24ம் தேதி திரும்பினார். அப்போது விடுதி மேலாளர் உத்தரவின்படி அவரது உடைமைகளை மாற்று அறையில் ஊழியர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகை ஆத்திரத்தில் விடுதி ஊழியரை காலணியால் தாக்கி விடுதியில் தங்கியிருந்ததற்கான 1.50 லட்சம் ரூபாய் தராமல் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்று தருமாறு குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.