பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

தமிழ் சினிமாவில் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு பெப்சி தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் வெளியூர்களில் வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த நாளுக்குரிய சம்பளத்தையும், பேட்டாவையும் வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள வழக்கம்.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் பல படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு, உரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல். இவற்றால் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இதனால் படப்பிடிப்பு நடக்காத நாட்களில் பெப்சி ஊழியர்களுக்கு எங்களால் சம்பளம் வழங்க இயலவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி வேலை இல்லாத நாட்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற வேண்டாம் என்று அனைத்து திரைப்பட சங்கங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.