பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு பெப்சி தொழிலாளர்களை அழைத்துச் சென்றால் வெளியூர்களில் வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த நாளுக்குரிய சம்பளத்தையும், பேட்டாவையும் வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள வழக்கம்.
தற்போது கொரோனா 2வது அலை காரணமாக வெளியூரில் படப்பிடிப்பு நடக்கும் பல படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரங்கு, உரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல். இவற்றால் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இதனால் படப்பிடிப்பு நடக்காத நாட்களில் பெப்சி ஊழியர்களுக்கு எங்களால் சம்பளம் வழங்க இயலவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி வேலை இல்லாத நாட்களுக்கு தயாரிப்பாளரிடமிருந்து சம்பளம் பெற வேண்டாம் என்று அனைத்து திரைப்பட சங்கங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.