பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சரத்குமார் நடித்த அரசு, சத்ரபதி, விக்ராந்த் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன் உள்பட பல படங்களை தயாரித்தவர் பாபுராஜா. சூப்பர்குட் பிலிம்சில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். கடைசியாக திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தை தயாரித்தார்.
53 வயதான பாபுராஜா கடந்த சில வருடங்களாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
பாபுராஜாவின் இயற்பெயர் பாபா பக்ருதீன். அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும் ஜாவீத் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் என்ற மகன்களும் உள்ளனர்.