கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ரஜினி, நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தை சிவா இயக்குகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தடைபட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், 2வது கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கியது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இன்னும் 30 சதவிகித படப்பிடிப்பே பாக்கி உள்ள நிலையில் 3ம் கட்டமாக சமீபத்தில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜனி தனி விமானத்தில் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தற்போது கொரோனாவின் இரண்டாது அலை காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் மாதக் கணக்கில் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை உள்ளது.
இதனால் தற்போது ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் அவசர அவசரமாக படமாக்கி வருகிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது. சில காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட வேண்டியது இருப்பதால் அதற்காக தெலுங்கானா மாநில அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். அது கிடைத்துவிட்டால் ரஜினி போர்ஷனை முடித்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.
மற்ற காட்சிகளை மேலும் இரண்டு வாரங்களில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.