மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு வருட காலமாக கட்டுப்படுத்த முடியாமல் மக்களைத் திண்டாட வைத்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் நவம்பர் மாதம் திறக்கப்பட்ட போது குறைவான மக்கள் வருகையால் திண்டாடியது.
பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கைகளில் வசூலைக் குவித்தது. அதன்பின் மீண்டும் மக்கள் வருகை குறையவே தியேட்டர்காரர்கள் திண்டாடினர். வாரத்திற்கு வாரம் படங்கள் வெளிவந்தாலும் மக்கள் வராத காரணத்தால் அடிக்கடி காட்சிகளை ரத்து செய்யும் நிலை எற்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் வெளிவந்தது. நேற்று தனுஷ் நடித்த 'கர்ணன்' படம் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் அவற்றையும் மீறி மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதாகத் திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
'கர்ணன்' படம் நேற்று வெளிவந்தாலும் கடந்த வாரம் வெளியான 'சுல்தான்' படம் இந்த வாரத்திலும் தியேட்டர்களில் தொடர்கிறது. இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் தாக்கம் எப்படியிருக்கப் போகிறது என்பது இனிமேல் தான் தெரியும். இருந்தாலும் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் தப்பித்துவிடும் என்கிறார்கள்.