நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது. தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் இணையதளத்தில் கார்த்தி, ராஷ்மிகா ரசிகர்கள் உடன் கலந்துரையாடினர். அப்போது பொன்னியின் செல்வன் படம் பற்றி கார்த்தியிடம் கேள்வி கேட்டார் ராஷ்மிகா.
அதற்கு, ‛‛பொன்னியின் செல்வன் இரண்டு பகாங்களாக வெளிவர உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. 60 ஆண்டுகாலமாக இதை படமாக்க தமிழ் சினிமா முயற்சித்து வந்தது. ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்துள்ளோம். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு தாமதமாகிறது. 2022ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார் கார்த்தி.