நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

பழம்பெரும் தெலுங்கு இயக்குனர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை. அர்த்தங்கி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஏகப்பட்ட தெலுங்கு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
மகன் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் கதையை எழுதியது இவர் தான். இதுதவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான மணிகர்னிகாவுக்கும், இவர்தான கதை எழுதியுள்ளார்.
70 வயதை தாண்டிய விஜயேந்திர பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலத்தில் தன்னோடு பழகியவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.




