ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பழம்பெரும் தெலுங்கு இயக்குனர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை. அர்த்தங்கி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஏகப்பட்ட தெலுங்கு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
மகன் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் கதையை எழுதியது இவர் தான். இதுதவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான மணிகர்னிகாவுக்கும், இவர்தான கதை எழுதியுள்ளார்.
70 வயதை தாண்டிய விஜயேந்திர பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலத்தில் தன்னோடு பழகியவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.